5353 பயனாளிகளுக்கு ரூ.344.53 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகள்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் 5353 பயனாளிகளுக்கு ரூ.344.53 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகளை வழங்கினார்.
மத்திய அரசு மற்றும் இந்திய நிதித்துறை, மத்திய ரிசர்வ் வங்கி, மாநில வங்கியாளர்களின் குழுமத்தின் அறிவுரையின்படி, இந்தியாவின் 75-ஆம் ஆண்டு சுதந்திர தின அமுதப் பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்டம் இந்தியன் வங்கி, மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகளின் சார்பில் வாடிக்கையாளர்களின் தொடர்பு முகாம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (08.06.2022) நடைபெற்றது.
இம்முகாமில் விவசாயம், தொழில் முனைவோர் மற்றும் தனி நபர் கடனாக 5353 பயனாளிகளுக்கு ரூ.344.53 கோடி கடனுதவிகளையும், வங்கிகளுக்கு சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
வங்கிகள் மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவும் வகையில் செயல்பட வேண்டும் என்றும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள், பட்டியல் இனத்தவர்கள், சிறுபான்மையினர் மற்றும் மகளிர் ஆகியோருக்கு முன்னுரிமை அளித்து கடன் வழங்கவும் வங்கி அலுவலர்களை கேட்டுக்கொண்டார்.
தொழில் முனைவோர்களுக்கு அதிக கடன்களை கொடுத்து மாவட்டத்தில் அதிகமான வேலைவாய்ப்பை பெருக்க உதவ வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். மேலும் கடன் வழங்கும் பரிசீலனை முறைகளை எளிதாக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் இந்தியன் வங்கியின் காஞ்சிபுரம் மண்டல மேலாளர் திரு.A.ராஜாராமன், சென்னை இந்தியன் வங்கி தலைமை அலுவலக உதவிப் பொது மேலாளர் திரு.A.கருணாகரன், துணை பொது மேலாளர்கள் (இந்தியன் ஓவர்சீஸ் வங்கி) திரு,ராஜேஷ், முன்னோடி வங்கி மேலாளர் திரு.க.சண்முகராஜ் மற்றும் அரசு அலுவலர்கள், வங்கி அலுவலர்கள், வங்கி வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments