பல்சர்பைக்குகளை மட்டும் குறிவைத்து திருடி வசமாக மாட்டிக்கொண்ட வாலிபர்கள்
ஸ்ரீபெரும்புதூர் அருகே சிசிடிவி காட்சிகள் மற்றும் போலீசாரின் வாகன சோதனையில் பல்சர்பைக்குகளை மட்டும் குறிவைத்து திருடி வசமாக மாட்டிக்கொண்ட வாலிபர்கள்.....
மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் இருசக்கர வாகன திருட்டு அதிகமானதை தொடர்ந்து திருட்டுப்போன வாகனங்களை கண்டுபிடிக்க மற்றும் திருட்டு சம்பவங்களை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டு தொடர்ந்து மணிமங்கலம் மற்றும் படப்பை பகுதிகளில் திருடு போன இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து தீவிர வாகன சோதனை மேற்கொண்டதில்
திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நாவலூர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த பிரபாகரன் வ/24, பார்த்திபன் வ/21, ஹரிஷ்(எ)சாமி வ/19 ஆகியோர் கைது செய்யப்பட்டு ஒரத்தூர் சாலை செரப்பனஞ்சேரி, கூடுவாஞ்சேரி, குபேரன் நகர், ஊரப்பாக்கம், மற்றும் ஒரகடம் ஆகிய இடங்களில் திருடிய 5லட்சம் மதிப்புள்ள 5 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இவர்கள் திருடிய இருசக்கர வாகனங்கள் அனைத்தும் பல்சர் வாகனங்கள் ஆகும்.
இவர்கள் மூவர் மீது ஏற்கனவே மணிமங்கலம் காவல் நிலையத்தில் வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments
Thank you for your comments