பேராசிரியர் வை. இராமகிருஷ்ணன் நினைவேந்தல் நிகழ்ச்சி
சென்னை
சென்னை நந்தனம் அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் உள்ள ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அரங்கில் கானா பாடல்களை தமிழகம் முழுவதும் கொண்டு சென்ற ஆய்வாளரும் கானா பாடகர்களை உலகிற்க்கு அறிமுகப்படுத்திய பேராசிரியர் வை. இராமகிருஷ்ணன் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் சென்னை பல்கலைக் கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவரும் தமிழ்நாடு பாட நூல் நிறுவத்தலைருமான வீ.அரசு கலந்துகொண்டு வை.இராமகிருஷ்ணன் திருவுருவப்படத்தை திறந்துவைத்து நினைவேந்தல் உரை நிகழ்த்தினார். இந்நிகழ்விற்கு அக்கல்லூரி முதல்வர் பேராசிரியர் அர.ஜெயசந்திரன் தலைமையில், தமிழ்த்துறைத் தலைவர் சேஷாத்திரி முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை டாக்டர் அம்பேத்கர் அரசு கல்லூரி பேராசிரியரும் வை.இராமகிருஷ்ணனின் மாணவரும் முனைவர் அ.மோகன் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க பேராசிரியரும் மாநிலக் கல்லூரி முதல்வருமான கல்யாணராமன், பேராசிரியர்கள், ஜெயபால், அரங்க மல்லிகா, ஜோதிராணி, மா.து.ராஜகுமார், துரை.பார்திபன், முனைவர் சங்க மற்றும் எழுத்தாளர் யாக்கன் உட்பட ஏராளமானோர் கலந்துகொ ண்டு நினைவேந்தல் உரை நிகழ்த்தினர். இந்நிகழ்ச்சியில் பேராசிரியரின் குடும்ப உறுப்பினர்கள்கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments