ஈரோடு நந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் பசுமை இயக்கத்தின் சார்பாக கருத்தரங்கம்
ஈரோடு நந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் செயல்பட்டு வரும் மாணவர்களின் பசுமை இயக்கத்தின் சார்பாக கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில் ஈரோடு மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவின் துணை கண்காணிப்பாளர் எம். சண்முகம் மற்றும் ஆய்வாளர் ஆர். கவிதா லட்சுமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். விழாவில் நந்தா கல்வி நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் எஸ். ஆறுமுகம் மற்றும் நந்தா கல்வி நிறுவனங்களை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

No comments
Thank you for your comments