மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் ரூ.24.10 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்
காஞ்சிபுரம் அன்னை அஞ்சுகம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி இ.ஆ.ப., அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.24.10 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா-2022 காஞ்சிபுரம் அன்னை அஞ்சுகம் திருமண மண்டபத்தில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் சுமார் 200 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சிறப்பு பள்ளிகளை சார்ந்த மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மேலும் 20 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15,77,000/- மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், 20 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,36,800/- மதிப்பில் மோட்டார் பொருத்திய தையல் இயங்திரங்கள், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2,99,331/- மதிப்பில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், 25 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3,12,500/- மதிப்பில் பார்வைத்திறன் மற்றும் வாய் பேச இயலாத மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட திறன்பேசி, 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.45,250/- மதிப்பில் மூன்று சக்கரநாற்காலிகள், 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.39,500/- மதிப்பில் மடக்கு சக்கரநாற்காலிகள் என மொத்தம் 78 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.24,10,381/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.குமார் மற்றும் அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர்.
No comments
Thank you for your comments