தெலுங்கு உள்ளூர் விஸ்வகர்மா உறவின்முறை சங்கம் சார்பில் அன்னதானம்
கோயமுத்தூர் :
கோயமுத்தூர் தெலுங்கு உள்ளூர் விஸ்வகர்மா உறவின்முறை சங்கம் சார்பில் கோவை மாவட்ட காவல் தெய்வம் கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு விழாவில் கலந்துகொண்ட 2000 பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் உணவு மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் நிறுவனத் தலைவர் அஞ்சலி சி.என் .சீனிவாசன், உறவின்முறை தலைவர் பா.அன்பு, நிர்வாகத் தலைவர் பா. கிருஷ்ணராஜ், துணைத்தலைவர் ரங்கராஜ்,செயலாளர் மா.ராம்குமார், பொருளாளர் சாந்தகுமார், இணைத் தலைவர் பா.சுரேஷ், சட்ட ஆலோசகர் விவேகானந்தம் மற்றும் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் பெருந்திரளானோர் கலந்து கொண்டு விழாவில் சிறப்பித்தனர்.
No comments
Thank you for your comments