Breaking News

உத்தரமேரூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாவட்டம்,  உத்திரமேரூர் அங்காளம்மன் ஆலயம் அருகே இருந்த நெல் கொள்முதல் நிலையத்தை அணைப்பள்ளம் கிராமத்திற்கு மாற்றி அமைப்பதை கண்டித்து மாவட்ட கழகம் சார்பில் உத்தரமேரூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


 கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசுகையில், உத்திரமேரூர் பகுதியில் திமுகவினர் அராஜகம் அதிகரித்துள்ளது, கழக ஆட்சியில் கொண்டு வந்த கடந்த 4 ஆண்டுகாலமாக நல்ல முறையில் இயங்கி வந்த நெல் கொள்முதல் நிலையத்தை திரும்பவும் அதே இடத்தில் இயங்க வைக்க வேண்டும்.. இல்லை என்றால் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெறும் என்றார். மேலும், அதிமுகவினரை பழிவாங்குவதாக நினைத்து விவசாயிகளை வஞ்சித்து கொண்டிருக்கிறார்கள், இந்த நெல் கொள்முதல் நிலையத்தால் 2000 ஏக்கர் விவசாய நிலங்களில் பயிரிடப்படும் நெல் பயிர்கள் கொள்முதல் செய்ய விவசாயிகளுக்கு எந்த ஒரு சிரமமுமின்றி கொண்டுவருவதற்கு சிறந்த இடமாக இருந்தது.

திமுக எம்எல்ஏ சுந்தர், ஒன்றிய செயலாளர் ஞானசேகர் கமிஷனுக்கு ஆசைப்பட்டு தனது சுயநலத்திற்காக உத்திரமேரூரில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆனைப்பள்ளம் கிராமத்திற்க்கு மாற்றியுள்ளனர். இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் அரசியல் பார்க்காமல் விவசாயிகள் நலனுக்காக கொண்டு வர வேண்டும் என பேசினார்.

உடன் கழக அமைப்புச் செயலாளரும் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வாலாஜாபாத் பா. கணேசன், அனைத்துலக மன்ற இணைச் செயலர் காஞ்சி பன்னீர்செல்வம், மாவட்ட அவைத் தலைவர் குன்னவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய கழக செயலாளர் தருமன், தங்கபஞ்சாட்சரம், பிரகாஷ் பாபு, நகர செயலாளர் ஜெய விஷ்ணு, மாவட்ட மாணவர் அணி செயலாளர் திலக்குமார், மாவட்ட கைத்தறி பிரிவுச் செயலாளர் வில்வபதி, மாவட்ட இளைஞர் அணி இணைச்செயலாளர் துரை பாபு, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர்கள் ரவிசங்கர், எம்.கே.பி வேலு, மேற்கு ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் கம்மாளம்பூண்டி பெருமாள்,  மத்திய ஒன்றிய இளைஞரணி செயலாளர் ரஞ்சித், ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



No comments

Thank you for your comments