காஞ்சி காமாட்சி அம்மனுக்கு ரூபாய் 5 கோடியில் தங்க கவசம் அணிவிப்பு
காஞ்சிபுரம்:
மகா சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு ஹைதராபாத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் ரூபாய் 5 கோடி மதிப்பில் வைரம் வைடூரியம் மரகத கற்கள் பதித்த தங்கக் கவசத்தை காணிக்கையாக வழங்கினார்.
இதனை காஞ்சிபுரம் சங்கர மடத்தில் உள்ள மகாபெரியவர் அதிஷ்டானத்தில் வைத்து காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சிறப்பு தீபாராதனைகள் நடத்தினார். இதனைத் தொடர்ந்து தங்க கவசம் சிம்மாசனத்தில் வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது சங்கர மடத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக வந்து காமாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து சேர்ந்தது.
பின்னர் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காமாட்சி அம்மனுக்கு தங்கக் கவசத்தை அணிவித்து சிறப்பு தீபாராதனைகள் செய்தார்.
ஊர்வலத்திலும் தங்கக் கவசம் அணிவிக்கும் நிகழ்ச்சியிலும் ஹைதராபாத்தைச் சேர்ந்த உபயதாரர்,அயோத்தி ராமஜென்ம பூமி அறக்கட்டளை பொருளாளர் கோவிந்த கிரி தொழிலதிபர்கள் மும்பை சங்கர், புனே காலே, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் முரளி, பாஜக நகர் பொதுச்செயலாளர் ஜீவானந்தம் காஞ்சி நகர வரவேற்பு குழு தலைவர் டி கணேஷ் மற்றும் உறுப்பினர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்திற்கான ஏற்பாடுகளை காஞ்சி ஸ்ரீ மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர் தலைமையிலான குழுவினர் செய்து இருந்தனர்.
No comments
Thank you for your comments