வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகளை ஆட்சியர் நேரில் ஆய்வு...
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் மாநகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் 2022 முன்னிட்டு மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் துணை வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைபெறுவதையும், மற்றும் மாநகராட்சி தேர்தல் கட்டுப்பாட்டு அறையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
கோவை மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் 2022 முன்னிட்டு துணை வாக்காளர் பட்டியல் எதிர்வரும் 04.02.2022-ம் தேதி வெளியிடப்படவுள்ளது. அதற்காக மாநகராட்சி பிரதான அலுவலக தேர்தல் பிரிவில் துணை வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைபெற்றுவருதை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு பணிகளின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார்கள்.
பின்னர், கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தினசரி தொலைபேசி வாயிலாக பெறப்படும் புகார்கள் குறித்தும், புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜ கோபால் சுன்கரா, மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.மோ.ஷர்மிளா, மாநகரப் பொறியாளர் (பொ) ராமசாமி, மேற்கு மண்டல உதவி ஆணையர் (பொ) .சரவணன், மாமன்ற செயலாளர் ஆ.அமல்ராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.
No comments
Thank you for your comments