சென்னை மாநகராட்சி 200 வார்டுகள் முடிவு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னை:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னையில் 153 வார்டுகளை திமுக தன்வசமாக்கி உள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தற்போதைய நிலையில் ஏறக்குறைய எல்லா வார்டுகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதில் தி.மு.க. தனியாக 153 வார்டுகளில் வெற்றி பெற்றது.
அ.தி.மு.க. 15 இடங்களை கைப்பற்றியது.
தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரஸ் 13 இடங்களில் வெற்றி பெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 4 இடங்களையும்,
சி.பி.ஐ., பா.ஜனதா தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றன.
விடுதலை சிறுத்தைகள் 4 இடங்களிலும்,
ம.தி.மு.க. 2 இடங்களிலும்,
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா ஒரு இடங்களிலும்,
சுயேட்சை 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
No comments
Thank you for your comments