Breaking News

நூல்கள் சிந்தனை! - பெண் ஏன் அடிமையானாள்

நூல் பெயர்:  பெண் ஏன் அடிமையானாள் 

நூல் ஆசிரியர் : தந்தை பெரியார்... 

விலை : ரூ.10/-

மொத்த பக்கங்கள் :  48

பதிப்பாளர்  : நன்செய் பிரசுரம்

தொ.எண் : 95663 31195 

முதல் பதிப்பு செப்டம்பர் 1933. பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகம் லிமிட் ஈரோடு. நன்செய் பதிப்பு 1..2..3.. மற்றும் நான்காம் பதிப்பு செப்டம்பர் 2021. 

முகவரை.. ஈரோடு ஈ.வே.ராமசாமி 01.01.1942...இப்புத்தகத்தை பெண் மக்கள் மாத்திரமல்லாமல் பெண்களிடம் ஜீவகாருண்யமும் சமத்துவ உணர்ச்சியும் கொண்ட எல்லா மக்களும் வாங்கி படித்து பார்த்து திருந்த வேண்டிய அவசியம் என்று கருதுகிறோம். புத்தகத்தில் மொத்தம் பத்து அத்தியாயங்கள் உள்ளன. 

முதல் அத்தியாயம்  கற்பு... 

கற்பு என்பது பெண்களுக்கு மாத்திரம் சம்பந்தப்பட்டதல்ல. கற்புக்காக மனத்துள் தோன்றும் உண்மை, அன்பை காதலை மறைத்துக் கொண்டு காதலும் அன்பும் இல்லாதவனுடனும் இருக்க வேண்டும் என்கின்ற சமூக கொடுமையும் அழிய வேண்டும்... 

இரண்டாவது அத்தியாயம்  வள்ளுவரும் கற்பும்.. 

பெண்கள் சொல்லை கேட்க கூடாது ..பெண்கள் இஷ்டப்படி நடக்க கூடாது.. அக் காலத்திற்கேற்ப கூறினார் என்பதோடு முடித்து விடுவதே நன்று. எக்காலத்திற்கும் ஏற்றது என்போமா யின் அவைகள்...குற்றம் குற்றமே. 

மூன்றாவது அத்தியாயம்  காதல்.. 

மற்றவர்கள் திருப்தியிலும் சந்தோஷத்திலும் நுழைந்து கொண்டு தொட்டதற்கெல்லாம் இது காதல் அல்ல. அது காதலுக்கு விரோதம் .அது காம இச்சை .இது விபச்சாரம் என்பது போன்ற அதிகப்பிரசங்கித்தனமான வார்த்தைகளை ஒருவித பொறுப்பும் இல்லாதவர்கள் கூறுவதால் அப்படிப்பட்டவர்கள் கூற்றையும்.. கூறும் காதலையும் சற்று பார்த்துவிடலாம் என்று இதைப் பற்றி எழுதலானோம்.. 

நான்காவது அத்தியாயம்  கல்யாண விடுதலை.. 

தொல்லைக்கும் துன்பத்திற்கும் விதமான இடையூறு இருக்கும் ஆனால் அதை முதலில் களைந்தெறிய வேண்டியது ஆறறிவுள்ள மனிதனின் முதல் கடமையாகும் .மனித ஜீவகாருண்ய திருப்திக்கும் இன்பத்திற்கும் வேலை செய்பவர்கள் இதை முதலில் செய்ய வேண்டும். 

ஐந்தாவது அத்தியாயம்  மறுமணம் தவறல்ல... 

நம்மைப் பொறுத்தவரையில் ஆண்களுக்கு சொன்ன விஷயங்கள் எல்லாம் பெண்களுக்கும் பொருந்தும் என்றும் உலக வாழ்வில் சமுதாயத்திலும்.. சட்டத்திலும் ..மதத்திலும் ஆண்களுக்கு சவுகரியங்களும் உரிமைகளும் பெண்களுக்கும் இருக்க வேண்டும்.  அப்போது தான் பெண்களுக்கு திருப்திகரமான இன்பத்தையும் ஆசையையும் அடையமுடியும் என்று கருதுகின்றோம். 

ஆறாவது அத்தியாயம் விபச்சாரம்...

எந்தத் தொழிலானாலும் ..மற்றவர்களுக்கு கெடுதியை கொடுக்கும் தொழில் எதுவானாலும் அப்படிப்பட்ட தொழில் இல்லாமலே உலகம் நடக்கும் படியாக தான் பார்க்க வேண்டும். பெண்கள் சுதந்திரம்.. பெண்கள் விடுதலை நடைபெறும் காரியங்களில் விபச்சாரம் என்னும் காரியம் வந்து முட்டுக்கட்டை போடும் ஆனால் அதை தைரியமாய் எடுத்து எறிந்துவிட்டு முன்னோக்கி செல்ல வேண்டியது உண்மையான உழைப்பாளிகளின் கடமையாகும்.. 

ஏழாவது அத்தியாயம் விதவைகள் நிலைமை... 

இது உலக இயற்கை அல்ல. எளியாரை வலியார் அடக்கி ஆண்டு இம்சிபாதேயாகும் . சமத்துவம்... சுதந்திரம் என்னும் முளை முளைக்கும் இடமாகும். இதற்கு விதவைகளுக்கு மறுமணம் செய்து கொள்ள உரிமை ஏற்படுத்துவதே முதல் காரியமாகும். 

எட்டாவது அத்தியாயம்.. சொத்துரிமை.. 

பெண்களுக்கு படிப்பு.. தொழில் ஆகிய இரண்டும் பெற்றோர்களால் கற்பிக்கப்பட்டு விட்டால் சொத்து சம்பாதிக்கும் சக்தி வந்துவிடும் .பின்னர் தாங்கள் சுதந்திரமாய் வாழ்க்கை நடத்தவும் கூடிய தன்மை உண்டாகிவிடும். 

ஒன்பதாவது அத்தியாயம்.. கர்ப்பத்தடை....

பெண்களுக்கு சொத்தும் வருவாயும் தொழிலும் இல்லாததால் குழந்தைகளை வளர்க்க மற்றவர்கள் ஆதரவை எதிர்பார்த்து தீர வேண்டி இருக்கிறது. 

பத்தாவது அத்தியாயம்  பெண்கள் விடுதலைக்கு ஆண்மை அழிய வேண்டும்.. 

ஆண்களால் பெண்களுக்கு விடுதலை  கிடைக்கவே கிடைக்காது. ஆண்மை என்றும் பதமே பெண்களை இழிவுபடுத்தும் முறையில் உலக வழக்கில் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது என்பதை பெண்கள் மறந்து விடக்கூடாது. 

ஆண்மை உலகில் உள்ள வரையிலும் பெண்மைக்கு மதிப்பு இல்லை என்பதை பெண்கள் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். ஆண்மை நிற்கும் வரையில் பெண்கள் அடிமையும் வளர்ந்தே வரும். பெண்களால் ஆண்மை என்ற தத்துவம் அழிக்கப்பட்டால் அல்லாது பெண்களுக்கு விடுதலை இல்லை என்பது உறுதி. ஆண்மையால் தான் பெண்கள் அடிமையாக பட்டிருக்கிறார்கள்.சுதந்திரம்...  வீரம் முதலிய குணங்கள் உலகத்தில் ஆண்மைக்கும் தான் உண்டென்று ஆண் மக்கள் முடிவு கட்டிக் கொண்டிருக்கிறார்கள். பெண்மக்கள் ஒவ்வொன்றையும் நன்றாக உணரவேண்டும். உங்கள் அடிமை விலங்கை நீங்கள்தான் உடைக்கவேண்டும்.வெற்றி பெற ஒரு எளியவனாக வாழ்த்துகிறேன். 

நூல் சிந்தனை கருத்தாளர் : சிந்து சீனு

வாரம்தோறும் திங்கட்கிழமை அன்று நூல்சிந்தனை செய்யப்படும். ஒவ்வொரு நூளும் தலா இரண்டு பிரதிகள் அனுப்பி வைக்கவேண்டும்.

நூல்கள் அனுப்ப வேண்டிய முகவரி

காலச்சக்கரம் நாளிதழ் 

#54, 3வது குறுக்குத் தெரு, 

டிகேஎம் கல்லூரி பின்புறம்,

கணபதி நகர், வேலூர் - 632002

மின்னஞ்சல்: ksm.news2015@gmail.com


No comments

Thank you for your comments