காட்பாடி ரயில் நிலையத்தில் இளைஞர் தூக்கு மாட்டி தற்கொலை!
வேலூர்
காட்பாடி ரயில் நிலையத்தில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
புனே மாநிலத்தை சேர்ந்தவர் பாபன் மண்டல் வயது (20). இவர் வேலை தேடி காட்பாடி வந்துள்ளார். சரியான வேலை கிடைக்காததாலும், உணவு கிடைக்காததாலும் மனமுடைந்த பாபன் மண்டல் வாழ்க்கையில் விரக்தி அடைந்து ரயில் நிலையம் பகுதியில் சுற்றித் திரிந்தார்.
சரிவர உணவு இல்லாததால் வாழ்க்கையை வெறுத்து ரயில் நிலையம் அருகிலுள்ள மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த காட்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் கார்த்திக் மற்றும் பரமசிவம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இறந்த பாம்பன் மண்டல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடமாநில இளைஞர் ஒருவர் உணவின்றி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காட்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments
Thank you for your comments