கோவில்கள் மூடல் .... கோபுர வாசலில் நின்றபடி கோபுர தரிசனம் செய்யும் பக்தர்கள்...
காஞ்சிபுரம்
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து கோவில் தமிழக அரசு உத்தரவின்படி காஞ்சிபுரத்தில் கோவில் மூடல்.... பக்தர்கள் கோபுர வாசலில் நின்றபடி கோபுர தரிசனம் செய்து செல்கின்றனர்.
கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் 3வது அலையாக முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. இதைத்தொடர்ந்து மத்திய மாநில அரசுகள் பல்வேறு வித கட்டுப்பாடுகளை நாளுக்குநாள் அறிவித்து வருகிறது.
நாடு முழுவதும் பரவிவரும் கொரோனா பெருந்தொற்றை முன்னிட்டு நினைவிடங்கள், அருங்காட்சியகங்கள், உள்ளிட்டவைகளை மறு உத்தரவு வரும்வரை பார்வையாளர்களுக்கும் பக்தர்களுக்கும் அனுமதியின்றி மூடப்படும் என தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது. மேலும் அனைத்து கோவில்களும் வெள்ளி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் கோவில் நகரமான காஞ்சிபுரத்திற்கு வெளிநாடு வெளிமாநிலம் என பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து சொல்லும், உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில், ஏகாம்பரநாதர் கோவில், வரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் என்று மூடப்பட்டுள்ளது.
தமிழக அரசு உத்தரவின்படி வெள்ளி சனி மற்றும் ஞாயிற்று கிழமை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.
அதே நேரம் கோவில்களில் ஆகம விதிப்படி தினமும் நான்கு கால பூஜைகள் பக்தர்கள் அனுமதியின்றி வழக்கம்போல் நடைபெறும் என இந்து சமய அறநிலையத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பட்டு நகரம் கோவில் நகரம் என பிரசித்தி பெற்ற காஞ்சிபுரத்தில் நாள்தோறும் பட்டுச்சேலை எடுத்து விட்டு கோவிலை சுற்றிப் பார்க்க வரும் பக்தர்கள் தமிழக அரசு அறிவிப்பால் கோவில்களை சுற்றி பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments