Breaking News

பெரியார் சிலை முன்பு அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்...

கோவை:

கோவை வெள்ளலூர் பகுதியிலுள்ள பெரியார் சிலையை செருப்பு மாலை அணிவித்து காவி பொடிகள் தூவி அவமதிப்பு செய்தவர்களை உடனடியாக கைது செய்ய கோரி பெரியார் சிலை முன்பு அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திமுக மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சிங்கை பிரபாகரன் மற்றும் கோவை வெள்ளலூர் அடுக்குமாடி குடியிருப்பு பாதுகாப்பு நலச் சங்கத் தலைவர் அபு விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த சிங்கை தொகுதி துணை செயலாளர் ஹக்கீம் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த  பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



No comments

Thank you for your comments