Breaking News

டெல்டா, ஒமைக்ரான் கூட்டாக 3வது அலையாக பரவுகிறது - சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை, ஜன.3-

தமிழகத்தல் டெல்டா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் இணைந்து 3 ம் அலையாக பரவுகிறது என்று சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்


தமிழ்நாட்டில் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் முழுக்க டெல்டா வைரஸ் இன்னும் ஒழியவில்லை. இரண்டும் சேர்ந்து தமிழக மக்கள் மத்தியில் பரவி வருகிறது. அதனால் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 முதல் 4 நாட்களிலேயே நெகடிவ் என வந்து விடுகிறது.

இந்த டெல்டா, ஒமைக்ரான் கூட்டுத் தாக்குதலை கட்டுப்படுத்த தமிழகத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்று சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களுக்கு சுகாதார யில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்தார். 

பேட்டிஅமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, இன்று முதல் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்க்ளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படவுள்ளது. தடுப்பூசி போடும் பணியை இன்று முதல்- அமைச்சர் தொடக்கி வைக்கிறார். ஜனவரி 10 முதல் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படவுள்ளது.

2ம் தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்களுக்கு பிறகு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கு முதலில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது என்று அமைச்சர்  சுப்பிரமணியன் கூறினார்..


டெல்டா மற்றும் ஒமைக்ரான் பரவல் குறித்த ஆலோசனை கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது.

No comments

Thank you for your comments