Breaking News

இந்த பிரபஞ்சம் தேடும்.... எவன் இவன் என்று ஒரு நாள்...!


அடையாளங்கள் ஏதும் இல்லை.. 

அவமானங்கள் என்றும் இல்லை

அணிகலன்கள் தேவையில்லை

அணிய நான் கலன் இல்லை...

அரைஞான் கயிரைத் தவிர

என் அவயத்தில் வேறொன்றுமில்லை... 

அதுவும் அரை மறைக்க..!


பெயராலே இந்த மதம் 

இன்ன சாதி என்று புரிகிறது.. 

மனிதன் என்ற பெயர் கூட  நீடிப்பதில்லை

கடைசியில் பிணம் என்ற பெயரே மிச்சம்..!

அழிந்துபோகும் இந்த உடலுக்கு 

எதற்கு இத்தனை ஆதாரங்கள் 

இந்த மண் என்னை சுமக்கிறது

நான் ஏன் கண்டதை சுமக்க வேண்டும்..!


மத குறியீடுகளை கூட  நான் அணிவதில்லை

மனிதம் என்ற இனம் நான் என்பதால்....

பசி ருசி அறியாது ஆனால் - தினமும் 

என்னை ருசி பார்க்கிறது  பசியெனும் உணர்வு..!


கால நேரம்  தேவை இல்லை

காலாவதி நேரம் தெரியவில்லை

இன்னது வேண்டும் என்று ஏதும் இல்லை 

என்னது   என்று ஏதும் சொந்தமில்லை..!


அரைஞான் கயிரைத் தவிர வேறொன்றுமில்லை...

நிறைஞானென்பதில் குறையுமில்லை..

என்ன அது என்று தேடும் ஆர்வம் 

கொண்டவன்  - நான்

இந்த பிரபஞ்சம்  தேடும்

எவன் இவன் என்று ஒரு நாள்..!


 இவண்

ஆற்காடு க குமரன் 

 

2 comments:

  1. Replies
    1. தன்னம்பிக்கை... சாதனையின் அஸ்திவாரம்..

      Delete

Thank you for your comments