Breaking News

ராஜேந்திர பாலாஜி உடல் நிலை குறித்து வெளியான பகீர் தகவல்!

விருதுநகர், டிச.31-

ராஜேந்திர பாலாஜி உடல் நிலை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரம் அதிமுக, தமிழக அரசியல் மற்றும் காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் தெரிவிக்கப்பட்டது. 

இவரை கைது செய்ய தனிப்படைகள் தீவிரம் காட்டி வரும் சூழலில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.  இதற்கிடையே முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் 5 புகார்கள் வந்துள்ளதாக விருதுநகர் மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பது ராஜேந்திர பாலாஜிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே பாஜக ஆதரவோடு சர்ச்சை சாமியார் நித்தியானந்தா கட்டமைத்துள்ளதாக கூறப்படும் கைலாசா நாட்டுக்கு ராஜேந்திர பாலாஜி போயிருக்கலாம் என்றும், அங்கு சென்றால் தமிழக போலீசாருக்கு ஒரே கல்லில் 2 மாங்காய் கிடைக்க கூடும் என்றும் பேசப்பட்டது.

இந்த சூழலில் ராஜேந்திர பாலாஜி டெல்லியில் பதுங்கி இருப்பதாக திடீரென தகவல் பரவியது. இதையடுத்து தனிப்படை போலீசார் டெல்லியில் முகாமிட்டு தேடி வருகின்றனர். ஆனாலும் அவர் குறித்து எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.

இந்நிலையில் ராஜேந்திர பாலாஜி தனது உதவியாளர் சீனிவாசன் மற்றும் முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் ஆகியோரை போனில் அழைத்து சட்ட உதவி கேட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மதுரை சரக டிஐஜி காமினி தலைமையிலான தனிப்படை போலீசார் சீனிவாசன் மற்றும் முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் ஆகியோரை விருதுநகர் குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து வந்து கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணைக்கு பிறகு ராஜவர்மன் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த 17ம் தேதி ஆர்ப்பாட்டத்தை முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்புவதற்கு முன்பு வரையில் என்னுடன் தொடர்பில் தான் இருந்தார்.

அதற்கு பிறகு அவர் என்னுடன் தொடர்பில் இல்லை. நாங்களும் அவரை தேடிக்கொண்டு தான் இருக்கிறோம் அவர் மீது தொடரப்பட்ட பொய் வழக்கை அவர், சட்டபூர்வமாக சந்திப்பார். 

மீண்டும் என்னை விசாரணைக்கு அழைத்தால் எப்போது வேண்டுமானாலும் வருவேன். 

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உடல் நிலை சரியில்லாததால் தான் ஜாமீன் வாங்குவதற்காக அவர் தற்போது அலைந்து கொண்டிருக்கிறார். எனவே ராஜேந்திர பாலாஜி வர வேண்டிய நேரத்தில் சரியாக வருவார். இவ்வாறு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் கூறினார்.

No comments

Thank you for your comments