Breaking News

தமிழகத்தில் மூடிக்கிடக்கும் தடுப்பூசி உற்பத்தி மையங்களில் உற்பத்தி தொடங்க அனுமதி: மத்திய நிபுணர் குழுவிடம் வலியுறுத்தல்

 சென்னை :

தமிழகத்தில் மூடிக்கிடக்கும் நவீன தடுப்பூசி உற்பத்தி மையங்களை திறந்து அவை தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தமிழக சுகாதார அமைச்சர் மா சுப்பிரமணியன் தமிழகத்துக்கு வந்துள்ள மத்திய நிபுணர் குழுவிடம் வலியுறுத்தினார்.

ஒரு நாளில் 3.26 லட்சம் பேருக்கு தமிழகத்தில் கொரானோ தடுப்பூசிகள் போடப்படுகின்றன. அதனால் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படுகிறது.

இந்தப் பற்றாக்குறையைப் போக்குவதற்கு தமிழகத்திலுள்ள 2 தடுப்பூசி மையங்களும் உதவக்கூடும். செங்கல்பட்டிலும், குன்னூரிலும் உள்ள தடுப்பூசி உற்பத்தி மையங்கள் உற்பத்தியை துவக்க மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

தமிழகத்தில் 4 கோடி ரூபாய் செலவில் கொரோனா வைரஸ் மரபணுவை கண்டறிவதற்காக, மரபணுக்களை வரிசைப்படுத்தும் மையம் மாநில மருத்துவ சேவைகள் இயக்குநரக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இதே போன்ற மையங்கள் பெங்களூர், ஹைதராபாத், ஆகிய இடங்களில் இயங்குகின்றன அவற்றுக்கு இணையாக தமிழகத்தில் உள்ள மரபணு வரிசைப்படுத்தும் மையத்தையும் மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும்.

இந்த மரபணு மையத்தில் கண்டறியப்படும் புதிய உருமாறிய கரோனா வைரஸ் இனங்களை வெளியிடுவதற்கு தமிழகத்துக்கு உரிமை தரவேண்டும் என்று தமிழக சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் கேட்டுக்கொண்டார்.

அபாயம் இல்லாத நாடுகளாக கருதப்படுகின்ற நாடுகளில்இருந்து சென்னை விமான நிலையம் மூலமாக ஏராளமான பயணிகள் வருகிறார்கள். இவர்களுக்கு வைரஸ் சோதனை செய்ய வேண்டியது இல்லை, ஆனால் பயணிகளில் அங்குமிங்குமாக தேர்வு செய்யப்பட்ட இரண்டு பேர் சோதனை நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது தமிழகம் இந்த எண்ணிக்கையை 10 சதவீத அளவுக்கு உயர்த்த முன்வந்துள்ளது. இதனை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.

கொரானோ வைரஸ் தொற்றுக்கான கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நடைமுறை விதிகளை எந்த வாதமும் அறிவிக்கப்படவில்லை.

மாநில அரசு உள்ளூர் கொரானோ வைரஸ் தொற்று குறுங்குழுமங்களை அவைகளில் கொரோனா வைரஸ் சேச்சுரேஷன் சோதனைகளை செய்து வருகிறோம் என்று மாநில சுகாதாரத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.


No comments

Thank you for your comments