Breaking News

அரையாண்டு விடுமுறையில் பள்ளிகளைத் திறந்தால் நடவடிக்கை


சென்னை, டிச.28-

தமிழகத்தில் அரையாண்டு விடுமுறை காலத்தில் எந்தப் பள்ளிகளைத் திறந்தாலும் நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் நேற்று (27-12-2021) உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் டிசம்பர் 25ம் தேதியிலிருந்து ஜனவரி 2ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சில தனியார் பள்ளிகள் விடுமுறை நாள்களிலும் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து வருவதாக தமிழக அரசுக்கு புகார் வந்துள்ளது. இதையடுத்து, ஜனவரி 2ஆம் தேதி வரை பள்ளிகளைத் திறக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. அரையாண்டு விடுமுறை நாள்களில் நேரடி வகுப்புகள் மற்றும் ஆன்லைன் வகுப்புகளை பள்ளிகள் நடத்தக் கூடாது எனவும் சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆணை பிறப்பித்துள்ளார்.

👀👀👀👀👀👀

No comments

Thank you for your comments