சபரிமலை ஐயப்பன் ஆபரண பெட்டியை கொண்டு வர தமிழக பக்தர்களுக்கு வாய்பு!
நாமக்கல், டிச.28-
கேரளா மாநிலம், சபரிமலையில் ஐயப்பன் ஆபரண பெட்டியை சுமக்க நாமக்கல் மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட தமிழர்களுக்கு வாய்ப்பு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இது பற்றி நாமக்கல் மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்க செயலர் ஜெகதீஸ் கூறுகையில், கேரளா மாநிலம், சபரிமலையில் உள்ள ஐயப்பன் சுவாமிக்கு ஆண்டுதோறும் திருவாங்கூர் தேவஸ்தானம் சார்பில் ஆரங்குளா பகுதியில் இருந்து ஐயப்பன் ஆபரண பெட்டி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, ஐயப்பன் சுவாமிக்கு அணிவிப்பது வழக்கம்.
இந்த ஆண்டு ஆபரண பெட்டி ஊர்வலத்தில் ஆபரண பெட்டியை எடுத்து வரும் வாய்ப்பு அகிலபாரத ஐயப்ப சேவா சங்கததினருக்கு கிடைத்தது. பம்பை முதல் சபரி மலை சன்னிதானம் வரை அகில பாரத ஐயப்ப சேவா சங்க நிர்வாகிகள் இந்த ஆபரண பெட்டியை சுமந்து வந்து ஐயப்பனுக்கு செலுத்தினர். இந்த ஆபரணப் பெட்டியை நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம், அரசம்பாளையம் பகுதியை சேர்ந்த மோகனசுந்தரம், செஞ்சி நிர்வாகி செந்தில்குமார், மதுரை நிர்வாகி செல்வராஜ், நீலகிரி நிர்வாகி சந்திரசேகர் மற்றும் கேரளாவை சேர்ந்த நான்கு பக்தர்கள் இந்த ஆபரண பெட்டியை சுமந்து வந்துள்ளனர். இது தங்கள் வாழ்வில் பெரும் பாக்கியம் என்கின்றனர் பக்தர்கள்.
No comments
Thank you for your comments