Breaking News

ரூ.5 கோடி மதிப்பீட்டில் நகர் ஊரமைப்பு அலுவலகக் கட்டடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மதுரை:

மதுரை மாநகரில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகக் கட்டடத்தை  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்  திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (15.12.2021) தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் சார்பில் மதுரை மாநகர், கூடல் புதூரில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்டநகர் ஊரமைப்பு அலுவலகக் கட்டடத்தை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

மாநிலத்தில் நகர்ப் பகுதிகளில் திட்டமிட்டபடி சீரான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக நகர் ஊரமைப்பு இயக்ககம் உருவாக்கப்பட்டது. முறைப்படுத்தப்பட்ட வளர்ச்சி நகரப்பகுதிகளில் ஏற்படுத்திட மண்டலத் திட்டங்கள், முழுமைத் திட்டங்கள், புதுநகர் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் விரிவான வளர்ச்சித் திட்டங்களை தயாரித்து செயல்படுத்துவது, மனைப்பிரிவுகள், மனைகள், கட்டடங்கள் ஆகியவற்றிற்கு ஒப்புதல் வழங்குதல் மற்றும் திட்டங்களில் மாற்றங்கள் செய்தல் போன்ற பணிகளை இவ்வியக்ககம்  செய்து  வருகிறது.

இத்தகைய முக்கியவத்துவம் வாய்ந்தபணிகளை ஆற்றிவரும் நகர்ஊரமைப்பு அலுவலகக்கட்டடத்திற்கு சொந்தக்கட்டடம் கட்டும் வகையில், மதுரைமாநகர், கூடல் புதூரில் தரைமற்றும் முதல் தளத்துடன்  5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இவ்வலுவலகம், இணை மற்றும் உதவி இயக்குநர்கள் அலுவலக அறைகள், பணியாளர்கள் அறைகள், கூட்டரங்கு உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

இந்தநிகழ்ச்சியில், மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு,   வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர்  ஹிதேஷ்குமார் எஸ்.மக்வானா,  நகர்ஊரமைப்புத்துறை இயக்குநர் எ.சரவண வேல்ராஜ்,  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

No comments

Thank you for your comments