புகையிலை பொருட்கள் மற்றும் கார் பறிமுதல்.. 3 பேர் கைது
தூத்துக்குடி :
எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 28 கிலோ புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக காரில் ஏற்றி வந்த 3 பேர் கைது
புகையிலை பொருட்கள் மற்றும் கார் பறிமுதல்
கைது செய்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்களின் உத்தரவின்பேரில் விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் அவர்கள் மேற்பார்வையில் எப்போதும்வென்றான் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில் வேல்முருகன் தலைமையில் தலைமை காவலர் குருசாமி ராஜா, காவலர்கள் பாண்டியராஜன் மற்றும் முத்துமுருகன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் நேற்று முன்தினம் எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அருங்குளம் விலக்கு அருகில் சந்தேகத்திற்கிடமாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில்,
அதில் இருந்த 1) மாரியப்பன் (33), த/பெ. பாலசுப்ரமணியன், பெரியார் நகர், குளத்தூர், 2) பொன்னுத்துரை (36) த/பெ. பெத்துபாண்டி, நடுத்தெரு, குளத்தூர், மற்றும் 3) அப்பணசாமி (43) த/பெ. முத்துச்சாமி நடுத்தெரு, அருங்குளம் ஆகிய 3 பேரும் சேர்ந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. உடனே மேற்படி போலீசார் எதிரிகள் 3 பேரையும் கைது செய்து ரூபாய் 30 ஆயிரம் மதிப்பிலான 28 கிலோ புகையிலைப் பாக்கெட்டுகளையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் (TN 69 E 3792 Marutii Omni) பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி கைது செய்யப்பட்ட எதிரி அப்பணசாமி என்பவர் மீது எப்போதுவென்றான் காவல்நிலையத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருளை சட்டவிரோதமாக விற்பனை செய்ததாக 4 வழக்குகளும், மாரியப்பன் என்பவர் மீது குளத்தூர் காவல் நிலையத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருளை சட்டவிரோதமாக விற்பனை செய்ததாக 3 வழக்குகளும், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தில் ஓரு வழக்கும் உள்ளது குறிப்பிடதக்கது.
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காரில் ஏற்றி வந்த எதிரிகளை கைது செய்து காரையும் பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.
No comments
Thank you for your comments