Breaking News

தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்...

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் வடகிழக்கு பருவமழை காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்களை பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

வடகிழக்கு பருவ மழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் கன மழை பெய்து வரும்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறை சார்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இதன் தொடர்ச்சியாக திருப்பெரும்புதூர் உட்கோட்டம், மணிமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வரதராஜபுரம், புவனேஷ்வரி நகரை வெள்ள நீர் சூழந்ததால் அங்கு வசிக்கும் மக்களை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் அவர்களது தலைமையிலான காவலர்கள் குழுவினர் பத்திரமாக மீட்டு தற்காலிக பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. 

மேலும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மாடம்பாக்கம் கிராமத்தில் மழையின் காரணமாக இ.சேவை மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களான பால், பிரட், பழம், பிஸ்கட் போன்றவைகளை வழங்கினார். பொதுமக்களின் பாதுகாப்பிற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் குளிக்கவும், பாதுகாப்பற்ற முறையில் பார்வையிட்டு செல்பி புகைப்படம் எடுப்பதை தடுக்கும்பொருட்டும் மற்றும் நீர் செல்லும் தரைப்பாலம் வழியாக பொதுமக்கள் செல்லாமல் இருக்கவும் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையினர் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் துறையினர் மற்றும் இதர அரசு துறையினருடன் இணைந்து தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சுமார் 1546 நபர்கள் மீட்கப்பட்டு 40 தற்காலிக பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டது.





No comments

Thank you for your comments