உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு பள்ளிக் குழந்தைகளுக்கு உதவிகள்
ஈரோடு, நவ.25-
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு ஈரோட்டில் பள்ளிக் குழந்தைகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டது.
ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவையொட்டி ஈரோடு அருகே ஆர்.என்.புதூரில் அமைந்துள்ள காது மற்றும் வாய் பேச முடியதோர் பள்ளியில் தமிழக நகர்புற மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி இனிப்புகள் மற்றும் மதிய உணவு மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட துனை செயலாளர் சின்னையன், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் ராஜேந்திரன், சூரியம்பாளையம் பகுதி செயலாளர் குமாரவடிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments