Breaking News

உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு 1000 பேருக்கு பிரியாணி வழங்கி கொண்டாட்டம்....

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி வாலாஜாபாத் தெற்கு ஒன்றிய  இளைஞரணி சார்பில்  கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஒன்றிய அமைப்பாளர் டி.சஞ்சய்காந்தி தலைமையில் இராஜாம்பேட்டை ஊராட்சியில் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். 


மேலும்  1000 பேருக்கு பிரியாணி வழங்கினார் மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர். 


உடன் ஒன்றிய செயலாளர் பி.சேகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ப.அப்துல்மாலிக், மாவட்ட துணை அமைப்பாளர் பெ.மணி, க.பால்ராஜ், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் வி.குமரன்,  எல்.இரமேஷ், தி.க.நவநீதகிருஷ்ணன் , எஸ்.எஸ்.கே. சத்யா, எஸ்.திவாகர் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் உட்பட கழகத்தினர் பலர் கலந்து கொண்டனர்.




No comments

Thank you for your comments