மண்சரிவு ஏற்பட்டதால் சாலை துண்டிப்பு... 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் தனி தீவாகியது.. !
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த மாகரல் செய்யாற்றில் ஏற்பட்டுவரும் தொடர் வெள்ள பெருக்கால் மண்சரிவு ஏற்பட்டதால் மாகரல் – இளையனார் வேலூர் சாலை துண்டிப்பால் போக்குவரத்து தடையால் 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் தனி தீவாகியது..
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாகவே வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை பெய்ததால் பாலாறு மற்றும் செய்யாறுகளில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதனால் வாலாஜாபாத் – இளையனார் வேலூர் மற்றும் காஞ்சிபுரம் – உத்திரமேரூர் ( கீழ் ரோடு) சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் காஞ்சிபுரம் , செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல சுமார் 45 கிலோ மீட்டர் தூரம் சுற்றி வரும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் செய்யாறு கரையோரம் செல்லும் சாலையான மாகரல் - வாலாஜாபாத் சாலையில் அரிப்பு ஏற்பட்டு தற்போது அப்பகுதி வழியாக செல்லும் போக்குவரத்து தடைபட்டு உள்ளதால் காவாந்தண்டலம் இளையனார்வேலூர் சித்தாத்தூர் கம்பராஜபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் சுமார் முப்பது கிலோ மீட்டர் தூரம் சுற்றி வரும் நிலை உருவாகியுள்ளது.
தற்போது இதன் ஒரு பகுதி பாலாற்று வெள்ளப்பெருக்கால் பாலம் சேதம் அடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது மற்றும் விழுப்புரம் செய்யாற்று பாலம் நீர் மிகுதியால் அரிப்பு ஏற்பட்டு மற்றொரு பக்கம் தடை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
No comments
Thank you for your comments