Breaking News

தேசிய சொத்து சீரமைப்பு கம்பெனிக்கு உரிமம் வழங்கியது இந்திய ரிசர்வ் வங்கி

மும்பை:

வங்கிகளின் வராக்கடன் சொத்துக்கள் வங்கிகளுக்கு பெரும் சுமையாக மாறாமல் தடுப்பதற்காக கடனுக்காக பதிவு செய்யப்பட்ட சொத்துக்களை கையகப்படுத்தவும் அவற்றை விற்று வரா கடனுக்கு ஈடு செய்யவும் 6000 கோடி முதலீட்டில் தேசிய சொத்து சீரமைப்பு கம்பெனி கடந்த ஜூலை மாதம் பதிவு செய்யப்பட்டது.

இந்தியக் கம்பெனிகள் பதிவாளர் பதிவு வழங்கப்பட்ட இந்த கம்பெனி வங்கியாக செயல்படுவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி அக்டோபர் 4 திங்கட்கிழமை உரிமம் வழங்கியுள்ளது.

இத்தகவலை தேசிய சொத்து சீரமைப்பு கம்பெனியே உருவாக்கும்படி பணிக்கப்பட்ட இந்திய வங்கிகள் சங்கம் தலைமை நிர்வாகி சுனில் மேத்தா ட்விட்டர் செய்தி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021 - 22ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட பொதுத்துறை வங்கிகளின் வராக் கடன் சுமையை குறைப்பதற்காக பேட் பேங்க் ஒன்று அமைக்கப்படும் என்று அறிவித்தார் இந்த அறிவிப்பின் அடிப்படையில் தேசிய சொத்து சீரமைப்பு கம்பெனி உருவாக்கப்பட்டது.

கம்பெனி வெளியிட்ட நிதிப் பாத்திரங்களுக்கு ரூ 30,600 கோடி ரூபாய் அளவுக்கு மத்திய அரசு காப்புறுதி வழங்குவதாக முடிவு செய்துள்ளது.

தேசிய சொத்து மீட்பு வராக்கடன் மொத்த மதிப்பில் 15 சதவீதத்தை ரொக்கமாக வாங்கிக் வழங்கும் மீதி 75 சதவீதத்துக்கு நிதி பத்திரங்களை வழங்கும்.

இந்த தேசியச் சொத்து சீரமைப்பு கம்பெனியில் 51% பொதுத்துறை வங்கிகள் முதலீடு செய்ய உள்ளன மீதமுள்ள 49 சதவீதத்தை தனியார் துறை வங்கிகள் முதலீடு செய்ய உள்ளன.

தேசிய சொத்து சீரமைப்பு கம்பெனியில் சென்ற வாரம் இந்திய ஸ்டேட் வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா இந்தியன் வங்கி ஆகியவை தலா13.27 சதவீதம் முதலீடு செய்தன. பஞ்சாப் தேசிய வங்கி 12 சதவீதம் முதலீடு செய்துள்ளது.

தேசிய சொத்து சீரமைப்பு கம்பெனி முதலில் கடனுக்கு ஈடாக 100 சதவீத மதிப்பெண் இணையம் வைக்கப்பட்ட சொத்துக்களை எடுத்துக்கொள்ள உள்ளது இதன்படி 22 வராக் கடன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன இந்த 22 கடன்களுக்காக ரூ. 90 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் என சொத்து சீரமைப்பு கம்பெனியினால் கையகப்படுத்தப்பட்ட உள்ளது.

தேசிய சொத்து சீரமைப்பு கம்பெனியில் பிஎம் நாயர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் அவர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் பணியாற்றினார். மற்ற இயக்குனர்களாக இந்தியன் வங்கிகள் சங்கத்தின் தலைமை நிர்வாகி மேத்தா, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் டெபுட்டி மேனேஜிங் டைரக்டர் எஸ் எஸ் நாயர், கனரா வங்கியின் தலைமை பொது மேலாளர் அஜித் கிருஷ்ணன் நாயர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

No comments

Thank you for your comments