காவலர் குறை தீர்ப்பு முகாமில் 1359 மனுக்கள்!
சென்னை, அக்.3-
“உங்கள் துறையில் முதலமைச்சர்’’ காவலர்கள் குறை தீர்க்கும் முகாமில் சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் கலந்து கொண்டு காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து 1,359 மனுக்களைப் பெற்றார்.
சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றும் அனைத்து காவல் ஆளிநர்களுக்கான “உங்கள் துறையில் முதலமைச்சர்” - காவலர்கள் குறை தீர்க்கும் முகாம் கமிஷனர் சங்கர் ஜிவால் தலைமையில் 02.10.2021 அன்று மாலை 3.00 மணியளவில் எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டரங்கில் தொடங்கி நடைபெற்றது.
இதில் சென்னை நகரில் பணிபுரியும் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களிடமிருந்து மாலை 3 மணி முதல் இரவு 10.30 மணிவரை தொடர்ந்து நேரடியாக காவல் ஆளிநர்களிடம் குறைகளைக் கேட்டறிந்து மனுக்களை பெற்றார்.
மேலும் சமீபத்தில் வாகன விபத்தில் மரணமடைந்த ஆயுதப்படை முதல் நிலைக்காவலர் ராமச்சந்திரனின் மனைவி பாரதியிடம், சக ஆயுதப்படை காவலர்கள் அளித்த ரூ.6 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
இந்த குறை தீர்ப்பு முகாமில் சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் என மொத்தம் 1,359 காவலர்கள் கலந்து கொண்டு பணி இடமாறுதல், தண்டனைக்குறைப்பு, ஊதிய முரண்பாடுகளை களைதல், காவலர் குடியிருப்பு வேண்டுதல், காவலர் சேமநல நிதியிலிருந்து மருத்துவ உதவி தொகை பெற்று தர கோருதல் தொடர்பான மனுக்களை அளித்தனர்.
அதனைப் பெற்றுக் கொண்ட கமிஷனர் சங்கர்ஜிவால் அந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையாளர் லோகநாதன், தலைமையிட துணைக்கமிஷனர் பாலாஜி சரவணன், ஆயுதப்படை துணைக்கமிஷனர்கள் சவுந்தரராஜன், ரவிச்சந்திரன், கோபால் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் உங்கள் துறையில் முதலமைச்சர் காவலர்கள் குறை தீர்க்கும் முகாம் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
No comments
Thank you for your comments