தோளில் போடும் துண்டு மாதிரி கூட்டணி... பாமகவுக்கு தான் இழப்பு... மாஜி அமைச்சர்கள் ஆவேசம்
சென்னை:
அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதால் பா.ம.க.வுக்குத்தான் இழப்பு என அண்ணா உருவப்படத்துக்கு மரியாதை செலுத்திய பின் அளித்த பேட்டியில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
கூட்டணி என்பது தோளில் போட்டிருக்கும் துண்டு போல தான், தேவையெனில் போட்டுக் கொள்வோம், இல்லையெனில் கழற்றி வைத்துவிடுவோம். கூட்டணியில் இருந்து பாமக வெளியேறியதில் வருத்தம் இல்லை... கூட்டணியை நம்பி அதிமுக இருந்ததில்லை என செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் தேர்தல் கூட்டணி அமைத்திருந்த பாமக, தற்போது 9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. இதற்காக விருப்ப மனுக்களையும் பெறத் தொடங்கி உள்ளது.
![]() |
| *Advt |
அதிமுகவுடன் கூட்டணியை திடீரென பாமக முறித்துக்கொண்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அறிஞர் அண்ணாவின் 113 வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணாசாலையில் அமைந்துள்ள அவரது சிலையின் கீழே வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாஜி அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது,
அதிமுக கூட்டணியிலிருந்து விலகியதால் இழப்பு பாமகவிற்குதான் , பாமக விலகியதால் அதிமுகவிற்கு இழப்பு இல்லை.
கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் அந்தந்த கட்சியின் தலைமைக்கு உண்டு. ஆனால் பாமக அதிமுகவை விமர்சித்தால் எங்களால் ஏற்க முடியாது. விமர்சிப்பது தொடர்ந்தால் நாங்கள் தகுந்த பதிலடி கொடுப்போம், யாருடைய கட்டாயத்தின் பெயரில் பாமக இந்த முடிவு எடுத்தது என தெரியவில்லை.
உள்ளாட்சி தேர்தல் முடிவு திமுகவுக்கு எதிராக இருக்கும். மக்கள் அதிமுகவுடன் இருக்கின்றனர். அதிமுகவின் உட்கட்சி பிரச்னை குறித்து பேச மற்றவர்களுக்கு தகுதி கிடையாது.
ஜெயலலிதா இறந்த பிறகு சின்னத்தை மீட்டோம், இடைத்தேர்தலில் வென்றோம். உள்ளாட்சி தேர்தலில் மகத்தான் வெற்றி பெறுவோம்.
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. எம்எல்ஏ பதவி மக்களுக்கு நன்றிக்கடன் பட்டது. தியாகம் செய்து போராட்டம் நடத்தி, நீண்ட நாள் அரிசியலில் இருந்து மக்களின் கஷ்ட நஸ்டம் தெரிந்திருக்க வேண்டும்.
ஆனால் திரைப்படத்தில் ஜாலியாக இருந்த உதயநிதியை வலுக்கட்டாயமாக சட்டமன்றத்தில் உட்கார வைத்தால் அவருக்கு போர் அடிக்கத்தான் செய்யும். உதயநிதியின் பேச்சு சட்டமன்றத்தை அவமதிக்கும் விதமாக அமைந்துள்ளது. சேப்பாக்கம் சேகுவேரா..எங்கிருக்கிறார் என யாருக்குமே தெரியவில்லை என்று ஜெயக்குமார் கூறினார்.
அண்ணாவின் பிறந்தநாளை யொட்டி மதுரை சிம்மக்கல்லில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அண்ணாவின் கொள்கைகள், சித்தாந்தத்தை தாங்கி பிடித்து அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க. ஏழை, எளிய மக்களுக்கு மட்டுமே செயல்படுகிறது, அண்ணாவின் எண்ணத்தை எடப்பாடியார் செயல்படுத்தி வருகிறார்.
கூட்டணி என்பது தோளில் போடும் துண்டு மாதிரி, துண்டை தேவையென்றால் தோளில் போட்டு கொள்ளலாம், தேவையில்லை என்றால் கழட்டி வைத்து கொள்ளலாம்,
அ.தி.மு.க. எந்தவொரு கால கட்டத்திலும் கூட்டணியை நம்பி இருந்ததில்லை. மக்கள், ஆட்சியில் செய்த திட்டங்கள், தொண்டர்களை நம்பியே அ.தி.மு.க. உள்ளது.
கூட்டணி என்பது சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் தான் எடுபடும். உள்ளாட்சி தேர்தல் என்பது அந்தந்த உள்ளாட்சி அமைப்பில் உள்ள செல்வாக்கை பொறுத்து அமையும்.எனவே பா.ம.க. தனித்து போட்டியிடுவதால் வருத்தம் இல்லை என செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம்
பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 113-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், தேனி பெரியகுளத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களுடைய திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்தும், திருவுருவப்படத்திற்கு மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்.






No comments
Thank you for your comments