ஆசிரியர் தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் கிழக்கு ரோட்டரி சங்கம் சார்பில் 60 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது
காஞ்சிபுரம்:
சுதந்திர இந்தியாவின் முதல் துணைக் குடியரசுத் தலைவரும், இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவரும், சிறந்த தத்துவஞானியுமான டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் 1962 முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி இந்தியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் காஞ்சிபுரத்தில் உள்ள எஸ்.எஸ்.கே.வி பள்ளியில் காஞ்சிபுரம் கிழக்கு ரோட்டரி சங்கம் தலைவர் முருகேஷ் தலைமையில் 60 முன்னாள் மற்றும் இந்நாள் ஆசிரியர்களுக்கு நல்ல ஆசிரியர் விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக மதுரை துணை ஆணையர் இந்திரா, எஸ்.எஸ்.கே.வி பள்ளி முதல்வர் விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மேலும் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் அனைவரும் அவர்களது பள்ளிகளில் நடந்த இனிமையான அனுபவங்களையும், நினைவுகளையும் மேடையில் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் காஞ்சிபுரம் கிழக்கு ரோட்டரி சங்கம் செயலாளர் கமலேஷ், பொருளாளர் பாஸ்கர், ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் என ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments