Breaking News

பெங்களூருவில் 144 தடை நீட்டிப்பு

பெங்களூரு, செப்.29-

ஏற்கனவே பெங்களூருவில பிறப்பிக்கப்பட்டு இருந்த 144 தடை உத்தரவும் அடுத்த மாதம்  11/10/2021 ஆம்   தேதி காலை 6 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவில் கொரோனா காரணமாக இரவு நேர ஊரடங்கு அடுத்த மாதம் 11/10/2021 ஆம்  தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்டு இருந்த 144 தடை உத்தரவையும் வருகிற 11ம்  தேதி வரை நீட்டித்து போலீஸ் கமிஷனர் கமல்பந்த் உத்தரவிட்டுள்ளார். 

👉 இலவச மின் இணைப்பு அறிவிப்பு👆

இதுகுறித்து போலீஸ் கமிஷனர் கமல்பந்த் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது, 

பெங்களூருவில் கொரோனா காரணமாக 27ம்  தேதி  வரை 144 தடை உத்தரவு அமலில் இருந்தது. தற்போது இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 5 மணிவரை அமலில் இருக்கிறது. கொரோனா காரணமாக அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, ஏற்கனவே பெங்களூருவில பிறப்பிக்கப்பட்டு இருந்த 144 தடை உத்தரவும் அடுத்த மாதம் 11/10/2021 ஆம் தேதி காலை 6 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இந்த தடை உத்தரவு பஸ், ரயில், விமான நிலையங்களுக்கு பொருந்தாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments

Thank you for your comments