மாவட்டம் தோறும் கிராம சபை கூட்டத்தை நடத்த கோரி மனு..... மநீம கமல்ஹாசன்
கோவை, ஆக.2-
தமிழ்நாட்டில் மாவட்டம் தோறும் கிராம சபை கூட்டத்தை முறையாக நடத்த வேண்டும் என கோவை மாவட்ட கலெக்டர் சமீரனிடம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று (02-08-2021) மனு அளித்தார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை வந்தார். அவர் 2 நாட்கள் கோவையில் தங்கி பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். கிராமசபை கூட்டங்கள் முறையாக நடத்தப்பட வேண்டும் என மநீம தலைவர் கமல்ஹாசன் கோவையில் மாவட்ட கலெக்டர் சமீரனிடம் அவர் மனு அளித்தார்.
பின்னர், நிருபர்களிடம் கமல்ஹாசன் கூறியதாவது, மாவட்டம் தோறும் கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
2020 ஜனவரி மாதத்திற்கு பின் கிராம சபை கூட்டம் நடக்கவே இல்லை என்பதுதான் எங்களுடைய குறை. இதனை மனுவாக அளித்துள்ளோம். இதை அவரும் ஏற்றுக்கொண்டுள்ளார். அடுத்த கிராம சபை கூட்டம் விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம். தமிழக பட்ஜெட்டில் கிராம சபைக்கு என தனி ஒதுக்கீடு குறித்து அரசு அறிவிக்க வேண்டும் என்பதையும் மனுவில் குறுப்பிட்டுள்ளோம்.
கோவையில் நன்றி தெரிவிக்கும் கூட்டத்தை நீங்கள் ஏன் நடத்தவில்லை என்ற பத்திரிகையாளரின் கேள்விக்கு, கூட்டம் கூட வேண்டாம் என அரசு அறிவித்துள்ளது. இவ்வளவு கூட்டம் கூடுவதை அரசு விரும்பவில்லை என்பதால் தான் நன்றி தெரிவிக்கும் நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நன்றி என் மனதில் உள்ளது என்று கமல்ஹாசன் பதிலளித்தார்.
இவ்வாறு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.
சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்தக் கோரி தலைவர் திரு. @ikamalhaasan அவர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.#KamalHaasan#MakkalNeedhiMaiam pic.twitter.com/lPI10vMuj1
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) August 2, 2021
ஆகஸ்டு 15-ஆம் தேதியன்று கிராமசபைக் கூட்டம் முறையாக நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் இன்று கோரிக்கை மனு கொடுத்தேன். தமிழகம் முழுக்க மக்கள் நீதி மய்யத்தினர் மாவட்ட ஆட்சியர்களிடம் மனு கொடுக்க உள்ளனர். pic.twitter.com/iUYzjgIfe6
— Kamal Haasan (@ikamalhaasan) August 2, 2021
கிராமசபை கூட்டங்கள் முறையாக நடத்தப்பட வேண்டும் என தலைவர் திரு. @ikamalhaasan அவர்கள் கோவையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்த பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். #KamalHaasan#MakkalNeedhiMaiam pic.twitter.com/XdjnOAMlwN
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) August 2, 2021


No comments
Thank you for your comments