டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஏ.கே.எஸ்.விஜயன் நியமனம்
சென்னை:
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக முன்னாள் எம்.பி., ஏ.கே.எஸ்.விஜயன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக முன்னாள் எம்.பி., ஏ.கே.எஸ்.விஜயன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ளார். ஏ.கே.எஸ்.விஜயனின் பதவிக்காலம் ஒரு ஆண்டு ஆகும்.
அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்பவர் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் பாலமாக செயல்படுபவர் ஆவார். அந்த வகையில் இந்த பதவி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியிலிருந்து 1999, 2004, 2009 என மூன்றுமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லி சென்றார். 2014ஆம் ஆண்டு அதிமுக வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவிய அவர் 2019ஆம் ஆண்டு போட்டியிடவில்லை. நாகப்பட்டினம் தொகுதி கூட்டணியில் இடம்பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அக்கட்சி சார்பில் போட்டியிட்ட எம்.செல்வராஜ் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பொறுப்பு என்பது தமிழ்நாடு கேபினட் பதவிக்கு இணையானது என கூறப்படுகிறது. டெல்லி அரசியல் குறித்து நல்ல அனுபவிமிக்க ஏகேஎஸ் விஜயன் இந்த பொறுப்பை சிறப்பாக மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.
முன்னதாக இந்த பதவி சபரீசனுக்கு செல்லலாம் என கூறப்பட்டது. ஸ்டாலினுக்கு டெல்லி அரசியலில் நம்பிக்கையுரிய கரமாக அவர் இருப்பார் என்று கூறப்பட்டது. தற்போது அந்த வாய்ப்பு விஜயனுக்கு சென்றுள்ளது.

No comments
Thank you for your comments