Breaking News

செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி கண்ணனிடம் சிபிசிஐடி விசாரணை

 சென்னை :

சிறப்பு டிஜிபி அதிகாரியால் பாலியல் தொந்தரவுக்கு ஆளான பெண் ஐபிஎஸ் அதிகாரியை, புகார் கொடுக்க செல்ல விடாமல் தடுத்த முன்னாள் எஸ்பி கண்ணனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.



செங்கல்பட்டு எஸ்பியாக இருந்த அவர், பரனூர் சுங்கச்சாவடியில், அதிரடிப் படையினருடன் வந்து குறிப்பிட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரியை சென்னைக்கு செல்ல விடாமல் தடுத்து, அத்துமீறியதாக புகார் பதிவாகி உள்ளது.  இந்த புகாரில் அவர் மீது கொலை மிரட்டல், முறையற்ற தடுப்பு உள்ளிட்ட 4 பிரிவுகளில் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அது தொடர்பாக அவரிடம் இன்று 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. சிபிசிஐடி விசாரணைக்கு தமது வழக்கறிஞருடன் வந்த கண்ணன், செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் என்ன நடந்தது என்பது குறித்து வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.


No comments

Thank you for your comments