Breaking News

மோடியின் ஆலோசகர் திடீர் ராஜிநாமா..!

புதுடெல்லி :

பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை ஆலோசகராக பதவி வகித்து வந்த பி.கே. சின்ஹா திடீரென தனது பதவியை ராஜிநாமா செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

PK Sinha

பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை ஆலோசகராக பதவி வகித்து வந்தவர் பி.கே. சின்ஹா (வயது 65). இவர் திடீரென தனது பதவியை நேற்று ராஜினாமா செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகி இருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவர் 1977-ம் ஆண்டின் உத்தரபிரதேச மாநில ஒதுக்கீடு ஐ.ஏ.எஸ். அணியை சேர்ந்தவர். 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை மத்திய அரசின் அதிகாரமிக்க அமைச்சரவை செயலாளராகப் பணியாற்றியிருக்கிறார். இதுமட்டுமில்லாமல் உத்தரப் பிரதேசத்தில் நீர்ப்பாசன துறை செயலாளர், மத்திய மின்சார துறை செயலாளர் ஆகிய பொறுப்புகளிலும் இருந்தார். இவரது திறமையைக் கண்டு வியந்து பதவிக்காலம் முடிவடைந்தும் மூன்று முறை பதவிக்காலத்தை மத்திய அரசு நீட்டித்தது. 

2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அதன்பின் அதே ஆண்டில் மக்களவை தேர்தல் முடிந்தபின் செப்டம்பர் மாதம் பிரதமரின் முதன்மை ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.  



பிரதமரின் பதவிக்காலம் வரையில் அல்லது அடுத்த உத்தரவு வரையில், இரண்டில் எது முதலில் வருகிறதோ அது வரையில் அவரது பதவி தொடரும் என்று நியமன உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தாக தெரிய வந்துள்ளது.



ஆனால் இதற்கு மாறாக அவர் தாமாகவே பிரதமரின் முதன்மை ஆலோசகர் பதவியில் இருந்து விலகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது சொந்த காரணங்களுக்காக ராஜினாமா செய்தார் என்று கூறப்பட்டாலும் அரசியல் நெருக்கடி காரணமாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மறைமுகமான தகவலும் வெளியாகியுள்ளது. அதாவது பிகே சின்ஹா அரசியல் அழுத்தம் நிறைந்த பணியில் இருப்பதால் உடல்நிலை மேலும் பாதிப்புக்குள்ளாகலாம் என்றும், இதனால் தொடர்ந்து பணியாற்ற முடியாது என்பதால் ராஜிநாமா செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.


 

No comments

Thank you for your comments