அதிமுகவில் சசிகலா, தினகரனை சேர்க்க வாய்ப்பு இல்லை- அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்
சென்னை:
அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரனை சேர்க்க வாய்ப்பே இல்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் இருந்த எழுச்சியை இப்போதும் காண முடிகிறது. 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையீடு கிடையாது. கொள்கை வேறு, கூட்டணி வேறு. எங்கள் கூட்டணியில் பாஜக ஒரு அங்கம்.
அதிமுகவில் சசிகலா, டிடிவி தினகரனை சேர்க்க வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

No comments
Thank you for your comments