Breaking News

மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்ல தடை

 புதுடெல்லி:

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.  அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெறும்.

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம். காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் நேரடியாக மழைக்கு வாய்ப்பில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments

Thank you for your comments